3.உபஹார இன்டர்நெட் அறிமுகத்துடன் செனேஹச உபஹார பொதியிற்கு என்ன நடக்கும்?
செனேஹச உபஹார பொதியில் மாற்றமேதும் இருக்காது. செனேஹச உபஹார வாடிக்கையாளர்களுக்கு தமது விருப்பம்போல் அதே பொதியை பாவிக்கவோ அல்லது உபஹார இன்டர்நெட்டிற்கு மாற்றவோ முடியும்.
4.நான் தற்போது செனேஹச உபஹார புரோட்பான்ட் பொதியை பாவிக்கின்றேன். நான் உபஹார இன்டர்நெட் பொதியிற்கு தானாகவே மாற்றப்படுவேனா?
இல்லை. உங்கள் விருப்பம்போல் செனேஹச உபஹார பொதியை தொடர்ந்தும் பாவிக்கவோ அல்லது உபஹார இன்டர்நெட்டிற்கு மாற்றவோ முடியும்.
5.உபஹார இன்டர்நெட் பொதி அறிமுகத்தின் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு செனேஹச உபஹார பொதியை பெற்றுக்கொள்ள முடியுமா?
ஏற்கனவே துடிக்கப்பட்ட செனேஹச உபஹார இணைப்புகளை வாடிக்கையாளர்கள் அந்த புரோட்பான்ட் துணை இணைப்புகளை மீண்டும் இணைத்துக்கொள்ளலாம்
6.உபஹார இன்டர்நெட்டிற்கு சந்தா செலுத்த தகுதிபெருபவர்கள் யார்?
•அரச துறை ஊழியர்கள்
•அரச கூட்டுத்தாபன மற்றும் நீதி செயற்குழு ஊழியர்கள்
•உள்ளூர் ஆட்சிமன்ற ஊழியர்கள்
•கூட்டுறவு சேவை ஊழியர்கள்
•அரச ஓய்வூதிய தாரர்கள்
7.இலவச டொங்கல் சலுகைக்கு தகுதிபெருபவர்கள் யார்?
உபஹார குரல் இணைப்பு, செனேஹச உபஹார வாடிக்கையாளர்கள் அல்லது கீழ்வரும் வகைப்படுத்தலில் ஒன்றின் கீழ் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து மொபிடெல் வலையமைப்பில் ரூபா .200 இற்கு குறையாத வாடகை செலுத்துகின்றவர்கள் இவ்விலவச டொங்கல் சலுகையை பெற்றுக்கொள்ளலாம்.
•அரச துறை ஊழியர்கள்
•அரச கூட்டுத்தாபன மற்றும் நீதி செயற்குழு ஊழியர்கள்
•உள்ளூர் ஆட்சிமன்ற ஊழியர்கள்
•கூட்டுறவு சேவை ஊழியர்கள்
•அரச ஓய்வூதிய தாரர்கள்
8.நான் தற்போது உபஹார குரல் இணைப்பு பாவனையாளர். நான் உபஹார இன்டர்நெட் இணைப்பை பெற்றுக்கொள்ளும் நடைமுறை என்ன?
உபஹார இன்டர்நெட் இணைப்பை பெற்றுக்கொள்ளும் ஒரு புதிய வாடிக்கையாளருக்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனினும் தற்போதைய உபஹார குரல் இணைப்பு பாவனையாளர்கள் டொங்கல் ஒன்றை இலவசமாக பெற்றுக்கொள்ள முடிவதோடு 24 மாத ஒப்பந்த மொன்றில் (டொங்கல் சம்பந்தமான) கையெழுத்திடவும் வேண்டப்படுவர்.
9.இலவச டொங்கல்களுக்கு தகுதிபெறாத புதிய உபஹார இன்டர்நெட் வாடிக்கையாளர்கள் மொபிடெலுடன் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட வேண்டப்படுவார்களா?
இல்லை
10.24 மாத ஒப்பந்தம் என்றால் என்ன?
டொங்கலை இலவசமாக பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்கள் இவ் 24 மாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். 24 மாதங்கள் தாண்ட முன்னர் வாடிக்கையாளர் இணைப்பை துண்டிப்பதாயின் டொங்கலின் மீதமுள்ள பெறுமதி பட்டியலுடன் சேர்க்கப்பட்டு (மீதமுள்ள மாதமொன்றிற்கு ரூபா. 100/- வீதம் கணிப்பிடப்படும்) 24 மாத ஒப்பந்தம் துண்டிக்கப்படும். இக்கட்டணம் பட்டியலில் “Dongle Fee” என குறிப்பிடப்படும்.
11.நான் தற்போது உபஹார குரல் இணைப்பு பாவனையாளர். நான் உபஹார இன்டர்நெட் இணைப்பை பெற்றுக்கொள்ளும் போது இணைப்புக் கட்டணம் செலுத்த வேண்டுமா?
ஆம். உபஹார இன்டர்நெட் உபஹார குரல் இணைப்பிலிருந்து தனித்து இயங்குவதால் ரூபா. 1000/- இணைப்புக்கட்டணம் செலுத்த வேண்டும் எனினும் மீள்ளளிக்கும் வைப்புப்பணம் தள்ளுபடி செய்யப்படும்.
12.நான் தற்போது செனேஹச உபஹார பாவனையாளர். எனது பொதியை உபஹார இன்டர்நெட்டிற்கு பொதிமாற்றம் செய்ய விரும்புகிறேன். இதற்கான செயன்முறை என்ன?
உபஹார இன்டர்நெட் இணைப்பை பெற்றுக்கொள்ளும் ஒரு புதிய வாடிக்கையாளருக்கான செயன்முறைகளை பின்பற்ற வேண்டும் எனினும் ரூபா. 1000/- இணைப்புக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதன்போது டொங்கல் சலுகை வழங்கப்படமாட்டாது.
13.செனேஹச உபஹாரயிலிருந்து உபஹார இன்டர்நெட்டிற்கு பொதிமாற்றம் செய்யும்போது இலவச டொங்கலையும் எனக்கு பெற்றுக்கொள்ள முடியுமா?
முடியாது, இலவச டொங்கலை பெற்றுக்கொள்ள ரூபா. 1000/- இணைப்புக் கட்டணம் செலுத்த வேண்டும்.
14.நான் உபஹார குரல் இணைப்பு பாவனையாளராகவிருந்து சில காலத்திற்கு முன்னர் இவ்விணைப்பை துண்டித்தேன். எனக்கு உபஹார இன்டர்நெட் இணைப்பை பெற்றுக்கொள்ள முடியுமா?
முடியும், இதற்காக மொபிடெலுக்கு நீங்கள் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகைகள் இருப்பின் அவை அனைத்தும் செலுத்தப்படல் வேண்டும்.
15.நான் உபஹார குரல் இணைப்பு பாவனையாளராகவிருந்து சிலகாலத்திற்கு முன்னர் இவ்விணைப்பை துண்டித்தேன். எனக்கு இலவச டொங்கல் சலுகையை பெற்றுக்கொள்ள முடியுமா?
இலவச டொங்கலைப் பெற்றுக்கொள்வதற்காக முதலில் அதற்கு தகுதிபெருவதற்கான நிபந்தனைகளை சரிபார்த்து பின்னர் உங்கள் உபஹார குரல் இணைப்பை மீண்டும் இணைத்து ரூபா. 1000/- செலுத்தி உபஹார இன்டர்நெட் இணைப்பையும் பெற்றுக்கொள்ளுங்கள்
16.இப்பொதியை நான் எவ்வாறு பெற்றுக்கொள்வது?
•மொபிடெல் நிலையம் ஒன்றிற்கு வருகைதரவும்
•உங்கள் தே.அ.அ./செல்லுபடியாகும் கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப் பத்திரம் உடன் நிறுவன/அரச அடையாள அட்டையை முன்வைக்கவும்.
•புகைப்படத்தில் தோன்ற விரும்புதல் அல்லது கடவுச்சீட்டு அளவையிலான புகைப்படம் கொண்டுவருதல்.
•அரச ஊழியர்/ஓய்வூதியதாரர் என்பதனை நிரூபிக்கக்கூடிய செல்லுபடியான சேவை ஆவணங்கள் (நிறுவனம், அரச அடையாள அட்டை/ஓய்வூதிய சீட்டு)
•விண்ணப்பப்படிவம், ஒப்பந்தம் மற்றும் தேவையான துணை ஆவணங்களை நிரப்பவும்.
•ஒருமுறை செலுத்தவேண்டிய ரூபா.1000/- இணைப்புக் கட்டணத்தை செலுத்தவும்.
•விலாச உறுதிப்படுத்தல் ஆவணத்தை முன்வைக்கவும்.(புதிய வாடிக்கையாளர்கள் மட்டும், ஓய்வூதிய சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியை வழங்குமிடத்து ஓய்வூதியதாரர்களுக்கும் தேவையிறாது)
17.இத்திட்டத்தின் கீழ் நான் எத்தனை இணைப்புகளை பெற்றுக்கொள்ளலாம்?
எந்தவொரு அரச ஊழியரும் அல்லது ஓய்வூதிய தாராரும் ஒரு இணைப்பை மாத்திரமே பெற்றுக்கொள்ளலாம்.
18.இப்பொதியை பெற்றுக்கொள்வதற்கான முழுச் செலவு என்ன?
•இலவச டொங்கல் சலுகைக்கு தகுதிபெறும் வாடிக்கையாளர்கள்:
இவ்வாடிக்கையாளர்கள் இணைப்புக் கட்டணமான ரூபா.1000/- மாத்திரமே செலுத்தவேண்டும்
•இலவச டொங்கல் சலுகைக்கு தகுதிபெறாத வாடிக்கையாளர்கள்:
இவ்வாடிக்கையாளர்களின் மொத்த செலவு ரூபா.2,490/- ஆகும். (இணைப்புக் கட்டணம்: ரூபா.1000/- + டொங்கலின் விலை: ரூபா.1,490/-)
19.உபஹார இன்டர்நெட் பொதியை பெற்றுக்கொள்வதற்காக நான் என்ன ஆவணங்களை எடுத்துவர வேண்டும்?
நீங்கள் பின்வருவனவற்றை எடுத்துவர வேண்டும்:
•உங்கள் தே.அ.அ./செல்லுபடியாகும் கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப் பத்திரம் உடன் நிறுவன/அரச அடையாள அட்டையை முன்வைக்கவும்.
•புகைப்படத்தில் தோன்ற விரும்புதல் அல்லது கடவுச்சீட்டு அளவையிலான புகைப்படம் கொண்டுவருதல்.
•அரச ஊழியர்/ஓய்வூதியதாரர் என்பதனை நிரூபிக்கக்கூடிய செல்லுபடியான சேவை ஆவணங்கள் (நிறுவனம், அரச அடையாள அட்டை/ஓய்வூதிய சீட்டு)
•விலாச உறுதிப்படுத்தல் ஆவணத்தை முன்வைக்கவும்.(புதிய வாடிக்கையாளர்கள் மட்டும், ஓய்வூதிய சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியை வழங்குமிடத்து ஓய்வூதியதாரர்களுக்கும் தேவையிறாது)
20.இவ்விணைப்பை இன்னொருவருக்கு கைமாற்ற முடியுமா (உரிமை மாற்றல்) ?
இணைப்பு கைமாற்றலாகாது ஆதலால் பதிவுசெய்த உரிமையாளரைத்தவிர வேறெவரும் வைத்திருக்கலாகாது.
21.நான் தற்போது மொபிடெல் புரோட்பான்ட் பாவனையாளர். எனது மொபிடெல் பொதியை உபஹார இன்டர்நெட்டிற்கு பொதிமாற்றம் செய்ய முடியுமா?
ஆம் முடியும், எனினும் நீங்கள் அரச ஊழியர் அல்லது ஓய்வூதியதாரராக இருத்தல் கட்டாயமாகும். இலவச டொங்கலைப் பெற்றுக்கொள்வதற்காக இணைப்புக் கட்டணமாக ரூபா. 1000 /- (அரச வரிகள் மற்றும் தீர்வைகளுக்கு உட்பட்டது) அறவிடப்படும்.
22.நான் தற்போது மொபிடெல் முற்கொடுப்பனவு பாவனையாளர். எனது முற்கொடுப்பனவு இணைப்பை உபஹார இன்டர்நெட்டிற்கு மாற்றும் போது அதே இலக்கத்தில் இணைக்க முடியுமா?
ஆம் முடியும், எனினும் சிம் அட்டை மாற்றப்பட வேண்டும் மற்றும் முற்கொடுப்பனவிலிருந்து பிற்கொடுப்பனவு இணைப்பு மாற்றலுக்கு நியமமான செயன்முறையை பின்பற்றுவதோடு இணைப்புக் கட்டணமாக ரூபா. 1000 /- (அரச வரிகள் மற்றும் தீர்வைகளுக்கு உட்பட்டது) செலுத்தப்படல் வேண்டும்.
23.எனது கடன் எல்லை என்ன?
உங்கள் ஆரம்பநிலை கடன் எல்லை ரூபா.1000/-
24.தற்போதுள்ள உபஹார குரல்/செனேஹச உபஹார வாடிக்கையாளர்கள் இப்பொதியை பெற்றுக்கொள்ளும்போது அவ்விலக்கம் ஒரே கணக்கிலக்கத்தினுள் இணைக்கப்படுமா?
இல்லை வேறு கணக்கிலக்கத்தினுள் இணைக்கப்படும்.
25.நான் தரவுப்பொதியில் குரல் சேவைகளை செயற்படுத்த முடியுமா?
ஆம் முடியும், "Act voice" என டைப்செய்து 2545 இற்கு SMS செய்யவும்.
26.உபஹார இன்டர்நெட்டில் நான் லேட் நைட் இன்டர்நெட் திட்டங்களை செயற்படுத்த முடியுமா?
இல்லை, உபஹார இன்டர்நெட் வாடிக்கையாளர்கள் இவ்வசதியை செயற்படுத்த முடியாது.
27.உபஹார இன்டர்நெட் உடன் வெளிநாட்டில் ரோமிங் வசதியை பாவிக்க முடியுமா?
முடியும், எனினும் ரோமிங் வசதிக்கான வைப்புப்பணம் செலுத்த வேண்டும்.
28.உபஹார இன்டர்நெட்டை எங்கு பெற்றுக்கொள்ளலாம்?
பிரதான காரியாலயம் மற்றும் எக்சல் வேல்ட்
மொபிடெல் கிளைகள்
SLT டெலிசொப் / RTO காரியாலயங்கள்
சிங்கர் மெகா
நேரடி முகவர் நிலையங்கள்
29.வீதப்படியான வாடகை அறவீடு காணப்படுமா?
ஆம் வாடகை வீதப்படியாக அறவிடப்படுமெனினும் வாடிக்கையாளர் தரவுத்தொகுப்பை வீதப்படி அல்லாது முழுமையாக அனுபவிக்கலாம்.
30.30 நாட்களுக்கான பண மீள்ளளிப்பு உத்திரவாத சலுகை என்றால் என்ன?
வாடிக்கையாளர், சேவை தரம்குறித்து அதிருப்தி கொள்ளுமிடத்து, இணைப்பு வழங்கப்பட்ட அல்லது பொதிமாற்றம் செய்த தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் இணைப்பை துண்டித்து டொங்கலை திருப்பிக்கொடுக்கும் வாய்ப்பு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்போது மொபிடெல் இணைப்புக்கட்டணம் மற்றும் டொங்கலின் விலையை (ரூபா.1490/- டொங்கல் இலவசமாக பெற்றுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படாது) பட்டியல் நிலுவை அறவிட்டபின் மீதியை வாடிக்கையாரருக்கு வழங்கும்.
இத்தொகை காசோலையாக வாடிக்கையாளருக்கு குரியர் மூலம் அனுப்பிவைக்கப்படும். இதன்போது டொங்கலை மீளளிப்பதற்காக வாடிக்கையாளர் எந்தவொரு மொபிடெல் நிலையம்/கிளை/SLT/சிங்கர் மெகாவிற்கு விஜயம் செய்ய வேண்டும். முகவர்களிடத்தில் டொங்கலை மீள்ளளிக்க முடியாது.
31.30 நாட்களுக்கான பண மீள்ளளிப்பு உத்திரவாதம் எவ்வாறு செயற்படுகிறது?
•இலவச டொங்கல் சலுகைக்கு தகுதிபெறும் வாடிக்கையாளர்கள்:
வாடிக்கையாளர் 30 நாட்களுக்குள் இணைப்பை துண்டித்து டொங்கலை மொபிடெலுக்கு திருப்பிக்கொடுக்கும்பட்சத்தில் இணைப்புக் கட்டணமான ரூபா.1000/- திலிருந்து நிலுவைகள் அறவிடப்பட்ட பின் மீதி மொபிடெலினால் எவ்வித தண்டத்தொகையுமின்றி வாடிக்கையாளருக்கு வழங்கப்படும்.
•இலவச டொங்கல் சலுகைக்கு தகுதிபெறாத வாடிக்கையாளர்கள்:
வாடிக்கையாளர் 30 நாட்களுக்குள் இணைப்பை துண்டிக்கும்பட்சத்தில் வாடிக்கையாளரின் விருப்பத்திற்ற்கமைய டொங்கலையும் மீள்ளளித்து இணைப்புக் கட்டணம்: ரூபா.1000/- + டொங்கலின் விலை: ரூபா.1,490/- என்ற தொகையை மீளப்பெறலாம். (செலுத்தவேண்டிய நிலுவைத் தொகைகள் இருப்பின் அவை அனைத்தும் செலுத்தப்படல் வேண்டும்)
32.பொதிமாற்றங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதா?
ஆம், பொதிமாற்றங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது எனினும் எந்தவொரு புரோட்பான்ட் பொதியிலிருந்தும் உபஹார இன்டர்நெட்டிற்கு மாற்றும்போது உபஹார இன்டர்நெட் பொதி மறுநாள் நள்ளிரவு 12 மணியிலிருந்தே அமுல்படுத்தப்படும்.